தாம்பரத்தில் தனியார்
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து சிறுமி சுருதி பலியான
வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் வந்தது.அப்போது,
பள்ளி வாகன விதிமுறைகளை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்,
விதிமுறைகளை வகுத்து உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்ய போதிய கால அவகாசம்
வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இதைக்
கேட்ட உயர் நீதிமன்றம், காலம் கடத்தாமல் விதிமுறைகளை விரைந்து சமர்ப்பிக்க
வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இதேப்போன்ற
விபத்துக்களில் உயிரிழந்த பள்ளிச் சிறார்களின் குடும்பத்துக்கும் இழப்பீடு
அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment