Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 9, 2012

    அரசுஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ! முதல்வர்அறிவிப்பு.

    சென்னை: ஆண்டுதோறும் வழங்கப்படும் அக விலைப்படி உயர்வு முதல்வர் ஜெ., காலத்தில் உரிய நேரத்தில் நமக்கு கிடைக்குமா என்ற ஏக்க பெருமூச்சில் இருந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் உயர்த்தி வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர் சங்கத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த அறிவிப்பை இன்றைய சட்டசபையில் அவர் வெளியிட்டார். முதல்வர் ஜெ., சபையில் இது குறித்து பேசுகையில்: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வழங்கியது போல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், என மொத்தம் 18 லட்சம் பேர் பயன்பெறுவர். இந்த படி , ஜனவரி மாதம் ( 1. 1. 12 ) என முன் தேதியிட்டு நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 383.49 கோடி வழங்கப்படும். இவ்வாறு ஜெ., தெரிவித்தார்.

    No comments: