Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 20, 2012

    கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

    கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே 18 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 26 ஒன்றியங்களில் இந்த ஆண்டு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.
    வயது வந்தோர் கல்வி மாதிரி மையங்கள்: தமிழகத்தில் கற்கும் பாரதம் எனும் எழுத்தறிவுத் திட்டம் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எழுத்தறிவு பெறாத, வயதுவந்தோருக்கு முதல்முறையாக கணினி வழியாகக் கல்வி கற்க வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக 40 மையங்கள் மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்களாகத் தரம் உயர்த்தப்படும்.
    அரசுப் பொதுத் துறை நிறுவனங்களின் உதவியோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.2.5 லட்சம் வீதம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கணினி சார்ந்த கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் வாயிலாக எழுத்தறிவு பெறாத 12 ஆயிரம் பேருக்கு கணினி வழியாகக் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும் என்றார் அமைச்சர் சிவபதி.

    No comments: