Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 23, 2012

    பாரதியார் பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு: 1,591 பேர் எழுதினர்.

    மாநிலம் முழுவதும் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பி.எட். நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.
     பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மூலமாக 2012-2013 கல்வி ஆண்டுக்கான பி.எட். நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாநிலம் முழுவதும் 9 மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.
     இந்தத் தேர்வில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர்.
     கோவை மையத்தில் 185 பேர்: கோவை, வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது.
     இந்த நுழைவுத் தேர்வை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன், தொலைதூரக் கல்வி இயக்குநர் அன்புமணி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர்
     கே.ஜி. செந்தில்வாசன், பி.எட். நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
     கோவையில் உள்ள மையத்தில் 185 பேர் தேர்வு எழுதினர். சேலத்தில் 400 பேரும், சென்னையில் 250, மதுரையில் 148 பேரும் தேர்வு எழுதினர்.
     மே மாதம் தேர்வு முடிவு: மொத்தம் 500 இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக, பி.எட். நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலு தெரிவித்தார்.

    No comments: