Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 11, 2015

    தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

    தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக  பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.

    இந்த மையம் 13 தலைப்புகளில் மதுரையில் 20ம் தேதியும், கோவையில் 22ம் தேதியும், சென்னையில்  24ம் தேதியும் கலந்தாலோனை கூட்டங்களை நடத்த உள்ளது. மேற்கண்ட 13 தலைப்புகளில் 11வது தலைப்பானது மொழியை வளர்த்தல் என்பதாகும். அதில் மும்மொழிக் கொள்கையை கொண்டு  வருவது தொடர்பாக பல்வேறு குழுக்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு 9 வகையான கேள்விகள் இடம் பெறுகின்றன. 


    அதில் முக்கியமாக மும்மொழிக் கொள்கை பற்றியது.  தமிழ் தவிர சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கான கேள்விகளும் இடம் பெற உள்ளன. நாடு முழுவதும் பெறப்படும்  ஆலோனையின் பேரில் சமஸ்கிருத மொழி மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளில் நுழையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 

    1 comment:

    suresh ramasamy said...

    This is never going to happen in Tamilnadu.to learn a language as an extra qualification should always be the choice of any individual.the state or any other institution should not force it down people's throat