Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 30, 2015

    மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்பிரமணிய பாரதி

    மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் இடம் பெற உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்களின் புகைப்படங்களை அஞ்சல் தலைகளாக வெளியிட்டு அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தி வருகிறது. 6 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஞ்சல் தலையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. 


    அந்த வரிசையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் அஞ்சல் தலையில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான முடிவு தகவல் மற்றும் ஒளிபரபரப்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தலைமையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

    அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, புதிய அஞ்சல் தலையில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தா, பகத்சிங் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் விரைவில் அஞ்சல் தலைகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    No comments: