Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 27, 2015

    இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி

    ஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை  மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து  ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும்  மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு  ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
    கடந்த 2 மாதங்களாக  ஆசிரியர்கள்  கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் கலந்தாய்வின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்த  விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.  இதன்படி கலந்தாய்வில் பங்கேற்க ஏற்கனவே வேலை பார்க்கும் இடத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நியதி 3  ஆண்டாக மாற்றப்பட்டது. இதனால் ஒரு இடத்தில் 3 ஆண்டுக்கும் குறைவாக  பணியாற்றிய பல ஆயிரம் ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க  முடியாத நிலை ஏற்பட்டது. 

    மேலும் சில விதிமுறைகள் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக காரணங்களால் இடமாறுதலுக்கு  திக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகள் முறைகேடுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். எனவே, இவற்றை மாற்றம் செய்து பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.  இதனால் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாற்றங்கள் குறித்து அறிவிப்பு  வெளியிடப்பட்ட பிறகு கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அனேகமாக ஆகஸ்டு முதல் வாரம் கவுன்சலிங் தொடங்க  வாய்ப்புள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    1 comment:

    TIRUMALAI said...

    I am working as BT Asst. (Maths) in Department of Elementary Education’s Panchayat Union Middle School in MADURAI district near Madurai City. Those who willing for Mutual Transfer from TRICHY district to MADURAI district can contact my Mobile 8220631143. (VIRALIMALAI AND ANNAVASAL BLOCKS OF PUDUKOTTAI DT. CAN ALSO CONTACT).