Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 28, 2015

    கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு

    இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


    இது குறித்து அவர் கூறியது: எனது தம்பியின் மரணம் பெரும் வேதனை அளிக்கிறது. எனக்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டது அதிர்ச்சியாக உள்ளது. எனது தம்பியின் உடலைப் பார்க்க வேண்டும். அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில்தான் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் குடும்பத்தினரின் விருப்பம். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    ராமேசுவரம் ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது: ராமேசுவரம் மண்ணில் பிறந்து நாட்டுக்காகப் பெருமை சேர்த்த அப்துல் கலாமின் இறப்பு, ஈடுகட்ட முடியாது. வேதனையும் பெரும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது உடல் ராமேசுவரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

    No comments: