“விருதுநகர்மாவட்டத்தில் பி.எட்.,படிக்கும் 1800 மாணவ ஆசிரியர்களுக்கு 27 பள்ளிகளில் 40 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது,” என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பி.எட்.,படிக்கும் 1800 மாணவ ஆசிரியர்களுக்கு 27 பள்ளிகளில் நுண்ணறிவு திறன் பயிற்சி, மாணவர்களுக்கு தனித்து கற்பித்தல் பயிற்சி, மெல்ல கற்பிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி, நவீன கருவிகள் மூலம் கற்பித்தல் பயிற்சி, வகுப்பறை சுத்தம் தொடர்பான பயிற்சி ஆகியவை அக்டோபர், நவம்பரில் பாடவாரியாக 40 நாட்கள் அளிக்கப்படுகிறது.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனிக்கும் மாணவ ஆசிரியர்கள், பின்னர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவர். அவர்களின் பயிற்சிக்கு தேவையான உதவிகளை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment