Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 23, 2013

    நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது, பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன்

    கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கோவை தீத்திபாளையம், அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களை நேற்று முன்தினம், அங்குள்ள கோவிலுக்கு சுற்றுலா அழைத்து சென்று திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்து 7ம் வகுப்பு மாணவி ரஞ்சிதா உயிரிழந்தார். விபத்து குறித்து மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், ஏழு ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறியதாவது: விபத்து குறித்த தெளிவான தகவல்கள், விசாரணைக்கு பின், சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல், சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த பள்ளி உதவி தலைமையாசிரியர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
    உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன் கூறுகையில், "பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் என்பதால், தேசிய குழந்தை தினத்தை கொண்டாடும் வகையில், அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றோம். நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது" என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    No comments: