Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 1, 2013

    தடுமாறும் புதிய ஐ.ஐ.டி.,கள்

    கடந்த 2008ம் ஆண்டு ஐ.ஐ.டி.,களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முடிவின்படி, புதிதாக அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி.,கள், 5 ஆண்டுகள் கடந்த பிறகும், பல குறைபாடுகளில் சிக்கி தவிக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.


    ஆசிரியர் பற்றாக்குறை, சொந்த வளாகங்கள் இல்லாமை மற்றும் அங்கு படித்த மாணவர்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் இன்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் புதிய IIT -கள், தங்களின் பழைய சகாக்களோடு போட்டியிட முடியவில்லை.

    இந்த புதிய IIT -களில், அனுமதிக்கப்பட்ட நிரந்தர ஆசிரியப் பணியிடங்களில் பாதியளவு காலியாக உள்ளன. இவற்றில் ஐ.ஐ.டி., ஜோத்பூரும், ஐ.ஐ.டி., மண்டியும் முக்கியமானவை. ஐ.ஐ.டி., ஐதராபாத்தில் மட்டுமே, பெருமளவிலான நிரந்தர ஆசிரியப் பணியிடங்கள் நிரம்பியுள்ளன.

    புதிய IIT வளாகங்கள் கிராமப்புறங்கள் போன்ற ஒதுக்குப்புற பகுதிகளில் அமைந்திருப்பதே, அவற்றில் பணிபுரிய பல திறமையான ஆசிரியர்கள் முன்வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், மேம்படாத உள்கட்டமைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, புதிய IIT -களை விட, NIT -களில் படித்த மாணவர்கள் 3 மடங்கு சிறப்பான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்ற நிலை உள்ளது. புதிய IIT -களில் படித்த மாணவர்களுக்கு NIT மாணவர்களைவிட, குறைந்தளவு சம்பளத்திலேயே பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், புதிய IIT -களின் உள்கட்டமைப்பு வசதிகளும், பழைய IIT -களுடன் ஒப்பிடுகையில், மோசமாக உள்ளதாக புகார்கள் எழுகின்றன.

    சில காலம் ஆகட்டும்

    அதேசமயம், புதிய IIT -களின் நிலைமைக்கு ஆதரவான கருத்துக்களும் உள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது: பழைய IIT -கள் தங்களை நிரூபிக்க குறைந்தது 50 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. எனவே, தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில், புதிய IIT -கள் சிறப்பாக செயல்படத் துவங்கிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு.

    முதலில் நிரந்தர வளாகம் வேண்டும். பிறகு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். போதுமான நிதி ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும். தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் சிறிது காலஅவகாசம் தேவை. எனவே, புதிய IIT -களை விமர்சிக்க இது சரியான நேரமில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    No comments: