Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 21, 2013

    பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்

    மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டம் தேனூர் பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் மதுசூதனன்(17). சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர். இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், ஒழுக்கமாக நடந்துகொள்வதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. ஆகவே பெற்றோரை பள்ளிக்கு அழைத்துவரவேண்டும் என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

    இந்தநிலையில், புதன்கிழமை காலையில் பள்ளிக்கு வந்த மாணவர் திடீரென தான் வைத்திருந்த விஷக்காயை தின்றதாகக் கூறப்படுகிறது. உடனே அவரை ஆசிரியைகள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கடந்த வாரம் பொய்கைக்கரைப்பட்டியில் 6 மாணவிகள் விஷம் சாப்பிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக ஆசிரியர், ஆசிரியைகளை மிரட்டும் வகையில் மாணவ, மாணவியர் தற்கொலைக்கு முயல்வது அதிகரித்திருப்பதாகவும், இதனால் கண்டித்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்பிக்க முடியவில்லை என்றும் ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    1 comment:

    Anonymous said...

    ipdilam apnnuna appo teachers enna than pannuvanga
    ippo students techersku payappadala teachers than students ku payappaduranga