Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 23, 2013

    ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை?

    கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராகினி உடலை, போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலியால், ராகினி தற்கொலை செய்து கொண்டதாக, பசுபதிபாளயைம் போலீசார் கூறினர். ஆனால், கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.பசுபதிபாளயைம் எஸ்.ஐ., பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராகினியின் உடலை, அவரது பெற்றோர் பெற்றுச் சென்றனர்.

    No comments: