Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, November 17, 2013

    மருத்துவ படிப்பில் காலியாக உள்ள 96 இடங்களுக்கு 20ம் தேதி கலந்தாய்வு

    அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், இந்திய மருத்துவ படிப்பில் காலியாக உள்ள, 96 இடங்களுக்கான கலந்தாய்வு, வரும், 20ம் தேதி, சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது.


    தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உட்பட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கடந்த மாதம், இரு கட்டங்களாக நடந்தது. இதில், நிரம்பிய இடங்கள் போக, 96 இடங்கள் காலியாக உள்ளன.

    அரசு கல்லூரிகளில், சித்தா 3, ஹோமியோபதி 3, ஆயுர்வேதம் 3, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் 1 என, 10 இடங்களும், தனியார் கல்லூரிகளில், சித்தா 6, ஹோமியோபதி 48, ஆயுர்வேதம் 8, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் 24 என, 86 இடங்களும் காலியாக உள்ளன.

    இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, வரும், 20ம் தேதி, சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. இதுதொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    முந்தைய கலந்தாய்வில் பங்கேற்று, அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், சுய நிதி கல்லூரிகளை தேர்வு செய்யாமல் காத்திருப்போர், சுய நிதி கல்லூரிக்கு இட ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் இணைந்தோர், அரசு, சுய நிதி கல்லூரிகளில் வேண்டிய துறை கிடைக்காததால், பிற மருத்துவ முறை கல்லூரிகளில் சேர்ந்தோரும், 20ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெறும்போது, நவம்பர், 15ம் தேதிக்கு முன், எடுத்த, 5,500 ரூபாய்க்கான வரைவோலை சமர்ப்பிக்க வேண்டும். கலந்தாய்வு, காலை, 9:00 மணிக்கு துவங்கும்; பங்கேற்போர் அனைவரும், 10:00 மணிக்குள் கையெழுத்திட வேண்டும்; தாமதமாக வருவோர் பங்கேற்க முடியாது. இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    No comments: