Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 20, 2013

    மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில் பட்டதாரிகள்

    "கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு" என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.


    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், 9ம் வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், வாசிக்க மற்றும் எழுத தெரியாத மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் எடுக்க, ரூ.2,500 சம்பளத்தில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் வரும் பிப்ரவரி வரை 3 மாதமே பணி செய்ய வேண்டும். தினமும் மாலை 5.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில், பகல் 12.30 மணி வரையிலும், பள்ளியில் இருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலை பட்டதாரி ஒருவரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நியமிக்கலாம்.

    இதற்கான நியமனத்தை, இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கும், பலமான "சிபாரிசு" தேடி பலர் அலைகின்றனர். பல பள்ளிகளில், சிபாரிசு கடிதங்களுடன் 50 பேர் விண்ணப்பித்துள்ளதால், தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: 3 மாதங்கள் என்றாலும், அரசு சம்பளம் என்பதால், இதற்கு அரசியல்வாதிகள் உட்பட பலரிடம் "சிபாரிசு" கடிதம் பெற்று வருகின்றனர். பட்டப்படிப்பு முடித்தவரை தான் ஆசிரியராக நியமிக்கின்றனர்.

    இவர்களுக்கு, குறைந்தது ரூ.5 ஆயிரம் சம்பளம் நிர்ணயித்தால், அப்பணிக்கு என ஒரு "கவுரவம்" இருக்கும் என்றார்.

    No comments: