Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 16, 2013

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் சார்பில் அரசாணை எண்.179ஐ நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் சார்பாக இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

    13/11/2013 அன்று முற்பகல் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கெளரவத் தலைவர் திரு.அ.சுந்தரராஜன் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.ச.செளந்தரராசன் மாநிலப் பொருளாளர் திரு. அ.ஆரோக்கியம் மாநிலத் தலைமை நிலையச் செயலர் திரு.இரா.கணேசன்   சாக்கோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்  சந்தித்தனர் . அப்பொழுது அரசானை 179  ஐச் செயல் படுத்துவது சார்பாக எழுந்துள்ள இடர்பாடுகள் பற்றி இயக்குனர் அவர்களிடம் விவாதித்தனர். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது கோரிக்கை விவரம்.

    இது தொடர்பாக மேற்கொள்ளப் பட வேண்டிய நடவடிக்கைகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் உடன் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார் .தொடக்கக் கல்வி இயக்குனர் அறையில் சுமார் 1 மணி நேரம் இந்த கோரிக்கை சார்பாக கடலூர் மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் ஆகியோருடன் விவாதித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டது . அப்போது உதவித்  தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிகளின் சட்டப்படியான பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது . முடிவுகளை இயக்குனர் அவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உடன் தெரிவிப்பதாகக் கூறினார் . அதே நேரத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் இயக்குனர் அவர்களை சந்திக்க வந்த போது  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்கத்தின் செயல் பாடுகளைப் பார்த்து ஒரு சில பொறுப்பாளர்கள் இக் கோரிக்கை நியாயத்தை கேட்டுப் புரிந்துகொண்டனர் . இயக்குனர் அவர்களுக்கு உதவித்  தொடக்கக்  கல்வி அலுவலர் சங்கம் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறது.

    No comments: