மதுரையில், மேலூர் கல்வி மாவட்டத்தில், கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், 7 ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாசிரியர் விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
சிறந்த சேவை மற்றும் கல்வி பணிக்காக, ஆண்டுதோறும் "நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. இதை 7 ஆண்டுகளாக கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
இந்தாண்டு, நரசிங்கம் சி.எஸ்.ஐ., தொடக்க பள்ளி தலைமையாசிரியர் ஜான்குணசேகர பாண்டியன் பெற்றார். 2010௧1ல், ரங்கநாயகி (சிட்டம்பட்டி நடுநிலை பள்ளி), சாந்திக்கு (அப்பர் தொடக்க பள்ளி) கிடைத்தது. 2009-2010ல், சந்திரன் (ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, கபீர்நகர்), முத்துலட்சுமி (ஆர்.சி.நடுநிலைப்பள்ளி), செல்வராஜ்(தேசிய நல்லாசிரியர் விருது) பெற்றனர்.
கடந்த 2008- 2009ல், தாமரைச்செல்வி (ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, குன்னத்தூர்) பெற்றார். 2007- 2008ல், ஜெயபால் (கபீர் நகர் பள்ளி), 2006- 2007ல், ஜெயபிரகாஷ் நாராயணன் (வடக்கு சக்குடி பள்ளி), ராமு (உலகனேரி பள்ளி), சுப்பிரமணியன் (மாநகராட்சி பள்ளி, சாத்தமங்கலம்) பெற்றனர்.
கடந்த 2005- 2006ல், பாண்டி (ஒத்தக்கடை, தலைமையாசிரியர்) என, கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து "நல்லாசிரியர்&' விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment