ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பினால் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள டீசல் விலை உயர்வு,
எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு போன்றவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங். விலகப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிலிண்டர் எண்ணிக்கையினை 6 ல் இருந்து 10 ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment