திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73ஆயிரம் பேர் கலந்து கொண்டுதகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம்
வெளியிடப்பட்டது.இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத் து விசாரித்தார், மனு தாரர் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி, தகுதி தேர்வு எழுதியவர்களை நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.தமிழக அரசு சார்பாக கூடுதல்அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, தகுதி தேர்வு எழுதிய பிறகு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில்பணி வழங்கப்படும். தற்போது பணி நியமனத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது.எனவே எந்த தடையும் விதிக்க கூடாது. தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது என்றார்.இதை கேட்ட நீதிபதி, 18ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
News Update: 21.09.2012
இன்று இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. TRB தேர்வுக்குழுத் தலைவர் திரு.சுர்ஜித் சௌத்ரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப் படும் என்று அவர் தெரிவித்தார்.
ஆதாரம்: கலைஞர் செய்திகள்
News Update: 21.09.2012
இன்று இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. TRB தேர்வுக்குழுத் தலைவர் திரு.சுர்ஜித் சௌத்ரி நீதிமன்றத்தில் ஆஜரானார். மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப் படும் என்று அவர் தெரிவித்தார்.
ஆதாரம்: கலைஞர் செய்திகள்
Post a Comment