Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 3, 2012

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பிளஸ்- 2 மாணவகளுக்கு உதவி

    பிளஸ்- 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கி பேசும் போது, கல்வி உதவித்தொகையை பெறும் மாணவர்களாகிய நீங்கள் மென்மேலும் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். அப்படி வரும்போது மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உதவித்தொகை சங்கிலி தொடர் போல தொடர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

    விழாவில், பிளஸ்- 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று என்ஜினீயரிங் மற்றும் கால்நடை படிப்புக்கு செல்லும் 17 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், டிப்ளமோ மற்றும் பட்டபடிப்பு படிக்க செல்லும் மாணவர்கள் 8 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

    No comments: