Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 27, 2012

    சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்

    அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இதுவரை நிரந்தரப்படுத்தவில்லை.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில், கணக்குப் பதிவியல் தணிக்கையில், மெக்கானிக், பயிர் பாதுகாப்பு, மேலாண்மையியல், கணிப்பொறியியல், தட்டெழுத்து உட்பட 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன.
    இதில் மொத்தம், 1,100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பு ஊதியத்தில் (தற்காலிமாக) வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக, 2,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    இவர்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள், 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, பணி நிரந்தரம் செய்வதற்காக சான்றுகள் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
    கடந்த 2010 ஜூலை மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 287 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது.பின்னர், 287 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தம் செய்வதற்கு கருத்துரு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
    சான்றிதழ் சரிபார்த்து நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இன்று வரை பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணை வரவில்லை. இதனால், தற்போதும் அதே சம்பளத்தில் தான் வேலை செய்கின்றனர். இனியாவது, சான்றிதழ் சரிபார்த்த, 287 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கியும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    No comments: