Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 17, 2012

    1999 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் BOOT அடிப்படையில் நடைமுறைப்படுத்த  ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
    கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் மேலும் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம்1999 பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுப்படுத்த முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கணினி மூலம் கல்வியினை பயின்று, தங்களது அறிவாற்றலையும் திறனையும் வளர்த்துக் கொண்டு அகில இந்திய மற்றும் உலகளாவிய அளவில் நடத்தப்படும்  போட்டித் தேர்வுகளில் முதன்மை நிலை பெற வாய்ப்பு உருவாகும் என்று தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    No comments: