Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 30, 2012

    இடைநிலை ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சலிங் தீவிரம்

    தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சலிங் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசிரியைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 28ம் தேதி ஒன்றியத்துக்குள் பணி நிரவல் மற்றும் பணிமாறுதல் கவுன்சலிங் நடந்தது. இதில் 12 யூனியன்களுக்குள், அந்தந்த ஒன்றியத்துக்குள்ளேயே தேவையான பணியிடங்களில் உபரியாக பணியாற்றிய ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றுக்கொண்டனர்.
    இதன்படி மொத்தம் 131 பேருக்கு இடமாறுதல் உத்தரவை தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சக்திவேல் வழங்கினார்.இதைத்தொடர்ந்து நேற்று (29ம் தேதி) காலை ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதலுக்கான கவுன்சலிங் நடந்தது.
    இந்த பணியில் தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சக்திவேல் தலைமையில், உதவி கல்வி அலுவலர்கள் செல்லப்பன், பழனிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
    கவுன்சலிங் குறித்து தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சக்திவேல் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் 15 யூனியன்கள் உள்ளன, இதில், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கு 45 காலிப்பணியிடங்களில் ஆசிரியர் மாறுதல் மேற்கொள்ள கவுன்சலிங் நடத்தப்பட்டதில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதன் முடிவுகள் பரிசீலனைக்கு பின் அறிவிக்கப்படும் என்றார்.

    No comments: