Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, July 8, 2012

    தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    உசிலம்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    உசிலம்பட்டி தேனி சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும்
    கட்டிய தொகைக்கு ரசீதும் கொடுப்பது இல்லை. இதனை கண்டித்தும், அரசு ஆணை 2009ன்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரியும் பள்ளி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மைய உசிலம்பட்டி பகுதி அமைப்பாளர் ரவி, பொறுப்பாளர்கள் தங்கப்பாண்டி, சிவா, செல்லப்பாண்டி, ஆறுமுகம், அழகேசன், முத்திருளன் உள்பட 80க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    No comments: