பிளஸ் 2 விடைத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில்
மதிப்பெண் மாறுபாடு உள்ள மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை
(ஜூலை 8) வழங்கப்படுகிறது.
மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்த
சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாறுதல் உள்ளவர்களும் பழைய மதிப்பெண் சான்றிதழுடன்
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், புதிய மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படாததால், இந்த மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மதிப்பெண் மாறுதல் உள்ள மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்
சான்றிதழை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்க அரசுத் தேர்வுகள் துறை ஏற்பாடுகளைச்
செய்துள்ளது.
இந்த மாணவர்கள் பழைய மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து புதிய மதிப்பெண்
சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ்.
கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை கடிதம் பெறாத மாணவர்கள், புதிய மதிப்பெண் சான்றிதழை
திங்கள்கிழமை (ஜூலை 9) காண்பிக்கும் நிலையில் சேர்க்கை கடிதம் வழங்கப்படும் என்று
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களில், விடைத்
தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மூலம் 622 மாணவர்களுக்கு தரவரிசையில் மாற்றம்
ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment