Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 2, 2012

    எந்த படிப்புகளை தேர்வு செய்தால் எதிர்காலம் சிறக்கும்.


    பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் வரை மதிப்பெண் பெறும் மாணவர்கள் எந்த படிப்புகளை தேர்வு செய்தால் எதிர்காலம் சிறக்கும்'' என்ற கேள்விக்கு மதுரையில் "தினமலர்' சார்பில் நேற்று நடத்த உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு துறை ஆர்வலர் ஆர்.கார்த்திகேயன் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

    அவர் பேசியதாவது: ஒரு புள்ளி விபரம் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களே பின்காலத்தில் சமூக தலைவர்களாக, அறிஞர்களாக, சிந்தனைவாதிகளாக, அரசியல்வாதிகளாக, தொழிலதிபர்களாக உருவாகின்றனர். தேர்வில் 95 சதவீதம் வரை மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவும், அரசு வேலைக்கும் அதிகம் செல்கிறார்கள். நமது கல்வித் திட்டம் அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே எண்ணத்தில் கணக்கிடுகிறது.
    ஓராண்டுக்குள் பாடத் திட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்கும் வகையில் மட்டுமே ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், உயர் கல்வி முடித்து வெளியில் வருவோரில் 10 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பெற்றோர் வற்புறுத்தலால் விருப்பம் இல்லாத பாடங்களை தேர்வு செய்து படிப்பதே காரணம்.
    என்ன தேவை என்பதில் இப்போதைய மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்ய பெற்றோர்கள் குறுக்கே நிற்க கூடாது. 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீடியா, மேலாண்மை படிப்புகள், சுற்றுலா, ஓட்டல் மேனேஜ்மென்ட், பேஷன் டெக்னாலஜி, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற துறை படிப்புக்களை தேர்வு செய்யலாம். வங்கி துறையில் இன்னும் 10 ஆண்டுகளில் ஏராளமான காலி பணியிடங்கள் ஏற்படும், என்றார்.
    வழிகாட்டி நிகழ்ச்சியை ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, ஜான்சன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.வி.எஸ்., நிறுவனங்கள், சபோல் மினரல் வாட்டர் மற்றும் ரேடியோ மிர்ச்சி இணைந்து வழங்கின.

    No comments: