Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, April 3, 2012

    புதிய நடவடிக்கையால் பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்...


    பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கையால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பல மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்த 2011-12ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்துவரும்,
    11 லட்சத்து 44 ஆயிரத்து 232 மாணவ, மாணவிகளுக்கு, ஏப்ரல் 4ம் தேதி முதல், பொதுத் தேர்வு துவங்குகிறது. இவர்களுக்கான தேர்வு அறை நுழைவுச் சீட்டு, அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.
    அதில் சில மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    கலக்கமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர், தலைமை ஆசிரியர்களை சந்தித்துக் கேட்டபோது, கடந்த மாதம் நடந்த அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக பதில் கூறினர்.
    இதனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், ஏப்ரல் 4ம் தேதி துவங்க உள்ள எழுத்துத் தேர்வில், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    No comments: