பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தற்காலிக பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் பதவி மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராகவும்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாகவும் ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்படும்.
இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில், தற்காலிக பட்டியல் பணி மூப்பு அடிப்படையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர்கள் வேலை நாட்களில் இருக்கும் போதே பட்டியலை சரி பார்த்து, பெயர் விடுபட்டாலோ, தவறுகள் இருந்தாலே, முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவித்து, சரி செய்து கொள்ளலாம்.
இதை தொடர்ந்தே, பள்ளிக்கல்வித்துறையால் பதவி உயர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு வேலை நாட்கள் ஏப்., 28ல் முடியும் நிலையில், இதுவரை தற்காலிக பட்டியல் அனுப்பப்படாததால் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment