Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 16, 2012

    17 ஆயிரம் மாணவருக்கு லேப்டாப் வழங்க இலக்கு.

    "நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, விழாவில் தமிழக சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
    நாமக்கல் மாவட்டம், ஜே.கே.கே., கல்லூரி, ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் 2,024 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், தனியரசு, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், நகராட்சி சேர்மன் கரிகாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    தமிழக சுரங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கமணி, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர், கல்வித்துறையை முதன்மை பெற்ற துறையாக மாற்ற வேண்டும் என்பதற்காக, 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக இலவச லேப்டாப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
    நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    No comments: