Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 16, 2015

    விருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

    கடந்த சில ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சி நாள் விழாக்களில் வழங்கி வந்த, சிறந்த பள்ளிக்கான விருது, நடப்பாண்டு இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


    தமிழகத்தில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை, 15ம் நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் விமரிசையாக கொண்டாட, கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

    ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும், கல்வி வளர்ச்சி நாளில் நடந்து வந்தது.

    பள்ளியில் மாணவர் சேர்க்கை, நூலகம், லேப் வசதி, மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், 20 விதமான கேள்விகள், முன்கூட்டியே பள்ளிகளிடம் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், பள்ளி தேர்வு செய்யப்பட்டு, கல்வி வளர்ச்சி நாளன்று அறிவிக்கப்பட்டு வந்தது.

    சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படும் துவக்கப்பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

    ஆனால், நடப்பு கல்வியாண்டில், விருது வழங்க தகவல் சேகரிக்கும் பணி கூட, நடைபெற வில்லை. அதே போல், கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையும் நிறுத்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியிலிருந்து செலவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    இதனால், பல பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாள் விழா களையிழந்து வருகிறது. விருது வழங்காததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    No comments: