Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 17, 2015

    இணைய சமநிலை அறிக்கை வெளியானது!

    மத்திய தொலைத் தொடர்பு துறை அமைத்த குழு, இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. இதில் இணைய சமநிலையை காக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இணைய சமநிலை: இன்டர்நெட் பயன்பாட்டில் எந்தவொரு வெப்சைட்டுக்கும், அப்ளிகேஷனுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல், அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவதே இணைய சமநிலை.


    எதிர்ப்பு: வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் முறையிட்டன. இதனால் அக்குறிப்பிட்ட பக்கங்களை பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இணைய ஆர்வலர்கள், போராட்டத்தில் குதித்தனர்.

    6 பேர் கொண்ட குழு: இதனையடுத்து, மத்திய தொலைதொடர்புத்துறை ஆலோசகர் ஏ.கே.பார்கவா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. பல்வேறு ஆய்வுக்குப்பின், அக்குழு தனது இறுதி அறிக்கையை, தொலைதொடர்புத்துறை வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதில் இணைய சமநிலை கொள்கையை கடைபிடிக்க உறுதியளித்துள்ளது.

    சாராம்சம்: குறைந்த விலையில் தரமான பிராட்பேன்ட் வசதி கிடைக்க வேண்டும்; இணைய சமநிலைக்கு எதிரான ஆர்.ஜி.ஓ., திட்டத்தை யாரும் ஊக்குவிக்கக் கூடாது; "ஏர்டெல் ஜீரோ' திட்டம் டிராய் ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டும்; ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற இன்டர்நெட் வழி டெலிபோன் அழைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; இவை தேசபாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்;

    செல்போன் அழைப்பு கட்டணங்களும், இன்டர்நெட் வழி அழைப்பு கட்டணங்களும், ஒரே சீராக இருக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் போன்ற முக்கிய சாராம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. மேலும் இந்த பரிந்துரைகள் மீது ஆக.,15 வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ஆதரவு: இணைய சமநிலை தொடர்பான இந்திய தொலை தொடர்புத்துறையின் பரிந்துரைகள், இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எனக்கூறிய பேஸ்புக் நிறுவனம், தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

    No comments: