Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 14, 2015

    மாணவர்களை அடித்த தலைமையாசிரியரை மாற்றக் கோரி முற்றுகை

    பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.


    திருப்பூர் நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, திங்கள்கிழமை காலை பள்ளிக்குத் தாமதமாக வந்த 8, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரை தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.


    சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு போலீஸார், முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களைக் கடுமையாக அடித்த தலைமையாசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும். அல்லது பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

    இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி, தலைமையாசிரியர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அவர், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    1 comment:

    gurudev said...

    உருப்பட்டுடும்.....