Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 20, 2015

    மாணவர்களின் உயர்வுக்கு மூன்று யோசனைகள்: நெல்லை சு.முத்து

    மாணவர்கள் உயர்வு பெற அன்பு, அறிவு, தேக்கம் இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று, பணி நிறைவு பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் கபிலர் விழாவின் 3-ஆம் நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.


    "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், நெல்லை சு.முத்துக்கு "கபிலவாணர்' விருதும், "டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா' பொற்கிழி ரூ. ஒரு லட்சமும் வழங்கி சிறப்புரையாற்றினார். விருது பெற்ற நெல்லை சு.முத்து விழாவில் பேசியதாவது: நான் பெற்ற விருதுகளிலேயே மிக உயரிய விருதாக, இந்த விருதைக் கருதுகிறேன். நான் பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவன். தமிழில் முடியும், தமிழால் முடியும் என்று கருத்துகளை உள்வாங்கி, தமிழில் படித்ததால்தான் நான் வாழ்வில் உயர்ந்துள்ளேன்.


    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உணவு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை தேவைப்படுகின்றன. இத்துடன் நாட்டையும் வீட்டையும் பாதுகாக்க வேண்டியதும் மிக அவசியம்.
    நல்ல உள்ளங்கள், நல்ல அனுபவங்கள் இருந்தால்தான் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். நான் மாணவர்களுக்கு முக்கியமாகக் கூற விரும்புவது, எந்த வேலையையும் நாளைக்கு என்று தள்ளிப் போடக் கூடாது. நாளைய சூரியன் உதிக்காமல்கூட போகலாம். நாளைக்கு என்று ஒரு வேலையை தள்ளிப்போடும்போது அடுத்த நாள் புதிய வேலை வந்து சேர்ந்து விடும். தள்ளிப்போட்ட வேலை, பழைய குப்பையாக மாறி விடும்.

    திருக்குறளை நான் நன்கு படித்துள்ளேன். அதில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு கருத்துகள் உள்ளன. ஒரு வேலையைச் செய்யும்போது அன்புடன் செய்ய வேண்டும். அதாவது, அந்த வேலை மீது பற்று வைத்துச் செய்ய வேண்டும். அதேபோல அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலையில் தேக்கம் இல்லாத நிலை வேண்டும் என்றார்.

    விழாவில் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் தி.எஸ்.தியாகராஜன் வரவேற்றார். செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச்செயலாளர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன், துணைத் தலைவர் கா.பி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் படைப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    No comments: