Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 3, 2015

    மருத்துவம் படிக்க 69 பேர் கடிதம் பெறவில்லை!

    மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர். தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை.


    சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள். எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம் பெறவில்லை.

    மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும், என்றார்.

    No comments: