Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 7, 2015

    50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

    இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


    தமிழக மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என, புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், பள்ளிகளில் காலி இட விவரத்தை, இணையதளத்தில் அறிவிக்க, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம், முதல் கட்ட காலியிடப் பட்டியல் வெளியானது. இரண்டாம் கட்ட பட்டியல், 
    http://tnmatricschools.com/ இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியானது.
    'இந்த இடங்களில், தமிழக அரசின் இலவச மாணவர் சேர்க்கைச் சட்டத்தின் கீழ், மாணவர்களைச் சேர்க்க, அந்தந்த பள்ளிகளை அணுகலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும், இலவச மாணவர் சேர்க்கை மாநில முதன்மை தொடர்பு அலுவலருமான பிச்சை தெரிவித்து உள்ளார்.

    ஆனால், இந்த காலியிடங்களில் சேர மாணவர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது.
    மெட்ரிக் இயக்குனரகம் உரிய முறையில் அறிவிப்பு செய்து, முன்கூட்டியே இத்திட்டத்தைத் துவங்காததே காரணம் என, கூறப்படுகிறது.

    பள்ளி (எண்ணிக்கை),ஒதுக்கப்பட்ட இடங்கள்,நிரம்பியஇடங்கள்,காலிஇடங்கள்
    நர்சரி           (5,314)                      55,605                         26,466                       29,139
    மெட்ரிக் (3,673)                               61,875                          39,329                       22,546
    மொத்தம்                                                                                                         51,685

    அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், டிசம்பர் முதல் மார்ச்சுக்குள் மாணவர் சேர்க்கையைத் துவங்கி விட்டனர். இலவச மாணவர் சேர்க்கைத் திட்டம், ஜூனில் தான் துவங்கியது. அதனால், மாணவர்களில் பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்தும், அதிகக் கட்டணம் கட்டியும் சேர்ந்து விட்டனர். எனவே, இலவசமாகச் சேர மாணவர்கள் இல்லை.
    பெற்றோர்

    தற்போது வீடு, வீடாக இலவச மாணவர் சேர்க்கைக்கான பிரசாரம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரில் சிலரை, தனியார் பள்ளி காலியிடங்களில் சேர்க்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம்.

    No comments: