Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, July 15, 2015

    ஐந்தாண்டு சட்டப் படிப்பு: ஜூலை 20 முதல் 23 வரை கலந்தாய்வு

    இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்மையில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
     அதைத் தொடர்ந்து இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
     இந்த நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது.
     அதன்படி, கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் ஓ.சி. பிரிவினருக்கு சேர்க்கை நடைபெறும். 
     தொடர்ந்து 21- ஆம் தேதி எஸ்.டி., எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 22-ஆம் தேதி எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினருக்கும், 23-ஆம் தேதி பி.சி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

    No comments: