Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 2, 2015

    பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார்.


    இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களுக்கான மேற்படிப்புச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.

    பரிசு பெற்ற மாணவ, மாணவியரிடம், - நீங்கள் நாடு போற்றும் வகையில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறீர்கள். உங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மிக உயரிய இடத்தை அடைந்து வெற்றி காண வேண்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் - என்று ஜெயலலிதா வாழ்த்தினார்.
    காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் முதல்வருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

    No comments: