Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 15, 2014

    ஆசிரியையிடம் தவறாக நடக்க முயற்சி: தலைமை ஆசிரியர் சிறை வைப்பு

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக பீம் குமார் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் 12 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். தலைமை ஆசிரியர் குமார் ஆசிரியைகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் 2 ஆசிரியைகள் தலைமை ஆசிரியர் அறைக்குள் வந்த போது அவர்களின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தலைமை ஆசிரியர் குமாரை அறைக்குள் பூட்டி சிறை வைத்தனர். பொது மக்களும், மாணவர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுபற்றி காஞ்சீபுரம் கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
    TTFB

    No comments: