Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 2, 2014

    சுய சான்றளிப்பு; ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.


    இது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடந்த 26ஆம் தேதி அனுப்பிய உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர
    நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை அனுப்பி வைக்குமாறும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மதிப்பெண் பட்டியல், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு இது கூடுதல் சிரமத்தை அளிக்கிறது. எனவே, யுஜிசியின் இப்போதைய உத்தரவு, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

    மாணவர்களிடம் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுவது என்பது இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி மேற்கொள்ளப்படுகிறது. நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்தப் பரிந்துரையை இந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

    இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களிடம் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறும் நடைமுறையை சில பல்கலைக்கழங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தனர்.

    No comments: