Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 1, 2014

    நாய் கூண்டுக்குள் 6 வயது சிறுவன் அடைப்பு: தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவு

    சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரத்தில் தனியார் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. புகாருக்கு உள்ளான தனியார் மழலையர் பள்ளியில் ஆய்வு செய்த மாநில கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்கள் சமர்பித்த அறிக்கையை அடுத்து, அந்தப் பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு நேற்று உத்தரவிட்டது.

    சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகராத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகி சசிகலாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனிடையே, குழந்தைகள் நல ஆர்வலர்களும், பொதுமக்களும் பள்ளி நிர்வகத்தைக் கண்டித்தும், தண்டனைக் கொடுத்த ஆசிரியையை கைது செய்யக்கோரியும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு பத்திரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 6 வயது சிறுவனை ஆசிரியை ஒருவர், நாய்கூண்டுக்கள் மூன்று மணி நேரம் அடைத்து வைத்தார். வகுப்பறையில் அருகில் இருந்த குழந்தையுடன் பேசியதால் இந்த தண்டனையை ஆசிரியை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    No comments: