Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 13, 2014

    22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டக்கிளையின் செயற்குழுகூட்டம் இன்று கூடியது.அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நாட்காட்டியின்படி வரும் அக்டோபர் 22 தேதி ஒருநாள் மட்டும் தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் 23.10.2014 அன்று தமிழகத்தில் பெரும்பாலான இல்லங்களில் தீபாவளி நோன்பு கொண்டாடுவது மிகப்பிரசித்தம்.மேலும் அன்று பள்ளிக்கு மாணவர் வருகையும் அப்பண்டிகையின் காரணமாக மிகக்குறைவாக இருக்கும்.மேலும் ஆசிரியர்களில் பலர் நோன்புகாரணமாக R.L எடுக்க உள்ளனர்.எனவே ஆசிரியர்களின் வருகையும் குறைவாக இருக்கும்.


    மேலும்  முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு பலர் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டி உள்ளதாலும்,தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்போது நடைபெறும் குறுவள மைய பயிற்சி நாட்களைக்கணக்கில் கொள்ளாமல் 220 வேளைநாட்களுக்குண்டான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு 7 குறுவள மைய பயிறை நாட்கள் நடைபெற உள்ளதால்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த உத்திரவுப்படி அந்நாட்களையும் வேலை நாளாக கருத்தில் கொண்டும்,

    தமிழகம் முழுவது உள்ள தனியார் சுயநிதி பள்ளிகள் பல ஏற்கனவே தமது நாட்காட்டிகளில்   22 முதல்26 வரை விடு்முறை அறிவித்துள்ளதால் அதேபோன்று  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகட்கும் தீபாவளிபண்டிகைக்கு மறுநாள் 23.010.2014 மற்றும் 24.10.2014 ஆகிய இரு நாட்களை சேர்த்து தீபாவளிப்பண்டிகை விடுமுறை என அறிவிக்க வேண்டும் என  தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களைக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாவட்டச்செயலர் திரு கோபாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.                                                                                                                                          
    இக்கோரிக்கைகடிதம் இயக்குனர் அவர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்  அனைத்து மாவட்டக்கிளைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்றி இவ்வாரம் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

    No comments: