Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 13, 2013

    அரசு விழாவில் மாணவர்களை காக்க வைத்த அதிகாரிகளுக்கு குட்டு

    சிவகங்கை முத்துப்பட்டியில் அரசு ஐ.டி.ஐ.,கட்ட திறப்பு விழா நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுவதற்கு, மதியம் 2.30 மணி ஆனது. இங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் நிறைய பேச
    வேண்டும் என, கருதிய அவர், மதிய சாப்பாட்டுக்கு நேரமாகி விட்டதால், மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டதா என, அதிகாரிகளிடம் கேட்டார்.

    இதற்கு இல்லை என்ற அதிகாரிகளின் பதிலால் கோபமுற்ற அமைச்சர், அதிகாரிகளை கடிந்து கொண்டார். உடனே டீ, பிஸ்கட் கொடுக்க உத்தரவிட்டார். இது பற்றி எதுவும் யோசிக்காமல் இருந்த அதிகாரிகள், டூவீலர்களில் மாணவர்களை அனுப்பி, டீ,பிஸ்கட் வாங்கி வந்து, பசியோடு இருந்த மாணவர்களுக்கு கொடுத்தனர்.

    விழாவில் 108 மாணவர்களுக்கு இலவச சைக்கிள், ரூ.6.50 லட்சத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பைக், 224 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த விழாவில், 786 மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார்.

    No comments: