Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 27, 2013

    முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    பொதுக்குழு கூட்டம்

    தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தோடு இணையும் இணைப்பு விழா மற்றும் ஒருங்கிணைந்த மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காமராசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார். மாநில பொது செயலாளர் திருஞானம், மாநில செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் தங்கவெற்றிவேந்தன், பொது செயலாளர் செல்வமணி, சட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் ஞானவரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

    பள்ளிக்கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின் போது ஒத்துக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    ஆதிதிராவிடர்– கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலகு விட்டு அலகு பணிமாறுதலுக்கு உரிய அரசாணை பெற்றிட ஆவன செய்யவேண்டும். விடுமுறை நாட்களில் முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி போன்ற பயிற்சிகளை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும். அரசு பொதுத்தேர்வு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் மாவட்ட தலைநகரங்களிலேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    No comments: