Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 24, 2013

    மனோன்மணியம் பல்கலையின் பி.ஏ., தமிழ் பாடத்திட்டத்தில் மாற்றமா?

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது பி.ஏ., தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பாடத்திலிருந்து, ஆப்ஷனல் பேப்பர்களான பெண்ணியம், தலித்தியம் மற்றும் பெரியார் தியரிகள் ஆகியவற்றை நீக்குவது பற்றி திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு, சமூக ஆர்வலர்கள் மத்தியில், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    நீக்கப்படும் மேற்கூறிய அம்சங்களுக்குப் பதிலாக, மொழிப்பெயர்ப்பு, சுற்றுலா, கணிப்பொறி அறிவியல் மற்றும் பண்டைய இலக்கியம் ஆகிய விருப்ப பேப்பர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    "நீக்கப்படவுள்ள ஆப்ஷனல் பேப்பர்கள், கடந்த 2005ம் ஆண்டு சேர்க்கப்பட்டன. சமூகத்தைப் பற்றி மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, பெரியார் தியரி, பெண்ணியம் மற்றும் தலித்தியம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

    ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு செமஸ்டரில், ஒரு ஆப்ஷனல் பேப்பரை படிக்க வேண்டும். இந்த அம்சங்கள் முற்போக்கானவையும்கூட. ஆனால், இதை நீக்கும் முடிவானது துரதிருஷ்டவசமானது" என்று பல்கலையின் தமிழ் துறையில் பணிபுரிந்த ராமசாமி கூறுகிறார்.

    ஆனால், "சில நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்காகவே, சில பழைய ஆப்ஷனல் பேப்பர்களை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது" என்று பல்கலை, தமிழ்த்துறையின் தலைவராக இருக்கும் அழகேசன் கூறுகிறார்.

    ஜனவரி 7ம் தேதி கூடிய Board of studies உறுப்பினர்களால், மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டாலும், இதுதொடர்பான இறுதி முடிவை பல்கலை சிண்டிகேட்தான் மேற்கொள்ளும் என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

    No comments: