Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 30, 2013

    தந்தைக்கு உணவு அளிக்க மறுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் : கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

    தர்மபுரி அருகே தந்தையின் பராமரிப்புக்கு உதவாமல் உணவளிக்க மறுத்த துவக்கப்பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த
    கரகூரைச் சேர்ந்தவர் தனபால்(80). விவசாயி. இவருக்கு கோவிந்தன், முருகேசன், ரவி என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சொத்துகள் அனைத்தையும் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார். இந்நிலையில், சுழற்சி முறையில் ஒவ்வொரு மகன் வீட்டிலும் தங்கி சாப்பிட்டு வந்தார். கடைசியாக அவரது 3வது மகனான பாலக்கோடு அடுத்த பொப்பிடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ரவியின் வீட்டிற்கு வந்தார். ஆனால் தந்தை ஒருதலைப்பட்சமாக சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டதாக கூறி அவருக்கு ரவி சாப்பாடு போட மறுத்துவிட்டார். மேலும், பராமரிப்பு செலவுக்கும் பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த முதியவர் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எஸ்ஐ சற்குணம் வழக்குப்பதிந்து ஆசிரியர் ரவியை கைது செய்தார்.

    அரசுப்பணியில் இருப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இதன்படி, குற்ற வழக்கில் சிக்கிய ரவி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட ரவி, நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அவரை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உத்தரவை அளித்த னர். இது ஆசிரியர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments: