Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 13, 2013

    அறிவியல் கல்லூரிகளின் தேவை அதிகரிக்கும்

    பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.
    கேள்வி: நதிகள் தேசியமயமாதல் குறித்து?

    அப்துல்கலாம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இணைக்கும் போது, பல மடங்கு நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    கேள்வி: அறிவியல் கல்லூரிகளுக்கு மவுசு குறைந்து வருகிறதே?

    அப்துல்கலாம்: சூரியன் எவ்வளவு காலம் பிரகாசிக்கும் என்பதற்கான பதில் போன்றது தான் இதற்கும். அறிவியல் கல்லூரிகளின் தேவை இன்னமும் அதிகமாகவே இருக்கிறது.

    கேள்வி: நாட்டின் முதுகெழும்பான விவசாயம் இன்று மிக மோசமான நிலையை அடைந்து, விவசாயி தற்கொலை செய்து கொள்கின்றனரே! இதே நிலை தொடர்ந்தால், வெளிநாடுகளிடம் உணவுக்கும் கையேந்த வேண்டி வருமா?

    அப்துல்கலாம்: சில வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்தாலும், நாட்டில் விவசாய பொருட்களின் உற்பத்தி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதே நிலம், அதே தண்ணீர், ஆனால், நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி ஆண்டுக்காண்டு, அதிகரித்து வருவதால், நீங்கள் சொல்லும் நிலைமை வராது.

    கேள்வி: 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற கருத்தில், தற்போது மாற்றம் உள்ளதா?

    அப்துல்கலாம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது, 5.5 சதவிகிதமாக உள்ளது. அடுத்த ஆண்டில், 8 அல்லது, 9 சதவிகிதமாக அதிகரிக்கும். வளர்ந்து வரும் பொருளாதாரமும், இளம் தலைமுறையினரின் அறிவுசார் சொத்தும், இந்தியாவை நிச்சயம், 2020ல் வல்லரசாக்கும்.

    No comments: