Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 19, 2015

    ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்

    மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், தொடக்கக்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்பு, இரண்டாண்டு கல்வியாக வழங்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை, தனித்தேர்வராக, அடுத்தஆண்டு பொதுத்தேர்வில் விண்ணப்பிக்க வேண்டும்.
    இந்த கல்வியாண்டில், மே, 18ம் தேதி, ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுகள் துவங்குகின்றன. இதில், பங்கேற்கும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைநேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, கடந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் நகலையும் இணைத்து, உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அணுக வேண்டும்.அங்கு அமைக்கப்பட்டுள்ள வெப்கேமரா மூலம், ஃபோட்டோ எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், ஃபோட்டோவுடன் கூடிய விண்ணப்பத்தை, அங்கேயே, தனித்தேர்வர்கள் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். தேர்வுக்கட்டணத்தையும்,அங்கேயே செலுத்திக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல்,22ம் தேதி, மாலை, 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: