Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 29, 2015

    விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு

    பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
    பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 20 துவங்கி 25ல் முடிக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியது. ஆனால் மதுரையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டு ஏப்.29 வரை திருத்தும் பணி நீடித்தது.

    இதனால் தாமதம் குறித்து தேர்வுத்துறைக்கு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்ட அளவில் மொழிப் பாடங்கள் உட்பட மொத்தம் 2.50 லட்சம் விடைத்தாள்கள் மதுரைக்கு வழங்கப்பட்டன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் விடுப்பு எடுத்ததால் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 7 ஆயிரம் மொழிப்பாட விடைத்தாள்கள் சிவகங்கைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனால் மதுரையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் விவரங்களை தேர்வுத் துறை கேட்டுள்ளது. மேலும் மருத்துவ சான்று உட்பட உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து விடுப்பு எடுத்தவர்கள் குறித்தும் விசாரிக்கப்படவுள்ளனர். இதுதொடர்பான விவரங்களையும் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்க உள்ளோம், என்றார்.

    காத்திருப்பு தண்டனை: விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவர். காலையில் இருந்து மாலை வரை அவர்களை காத்திருக்க வைத்து கடைசி நேரம் விளக்கம் கடிதம் பெற்று எச்சரித்து அனுப்பி வைக்கப்படுவர்.

    மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் நேரம், செலவை கணக்கிட்டால் இதுகூட ஒரு வகையில் நுாதன தண்டனைதான். ஆசிரியை என்றால் அவருடன் துணைக்கு ஒருவரும் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்கு இரட்டை செலவு ஏற்படும். இது தேர்வுத்துறையின் டெக்னிக் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

    No comments: