Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 16, 2015

    ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்

    அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.


     தனியார் சுயநிதி மற்றும் சிறுபான்மைப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, ஆண்டுதோறும், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, அண்ணா பல்கலையின் இணைப்பு புதுப்பிக்கப்படும். 

    நிரந்தர இணைப்பு:

    சில கல்லூரிகளுக்கு நிரந்தர இணைப்பு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இணைப்பை புதுப்பிக்க, ஆண்தோறும் டிசம்பர் இறுதியில் கல்லூரிகள் விண்ணப்பம் அளிக்கும். நிரந்தர இணைப்பு இல்லாத கல்லூரிகள் தவிர, மற்ற கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் சென்று, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக சோதனை செய்வர். 

    இந்த ஆண்டுக்கான ஆய்வை, அண்ணா பல்கலை அதிகாரிகள் சமீபத்தில் முடித்துள்ளனர். ஒவ்வொரு கல்லூரிக்கும், தனித்தனியாக ஆய்வறிக்கை தயாராகும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், விதிகளை பின்பற்றாத கல்லூரிகளின் பட்டியல், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பப்படும். பின், ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரையின்படி, விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு இணைப்பு மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நீக்கம்:

    இணைப்பு புதுப்பிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில், மே 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இணைப்பு ரத்தாகும் கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த முடியாதபடி, அந்த கல்லூரிகள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதற்கிடையில், இந்த ஆண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகளை மூட, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. இக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ளதால் அவற்றை மூட, ஏ.ஐ.சி.டி.இ.,யும், அண்ணா பல்கலையும் ஒப்புதல் அளித்துள்ளன. இக்கல்லூரிகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்தாமல், தற்போது படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அதற்கான வகுப்புகளை நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டு உள்ளது. 

    இதேபோல், 31 கல்லூரிகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, தனியார் பொறியியல் கல்லூரிகள் முன்வந்துள்ளன. இவற்றுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அனுமதி அளித்து உள்ளன. 

    No comments: