Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 6, 2015

    தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்

    தலைமையாசிரியர் பதவி உயர்வு, மருத்துவ விடுப்பை அனுமதிக்காமல் தனக்கு பள்ளி நிர்வாகம் நெருக்கடி அளித்து வருவதாக திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.


    பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருபவர் கே. சுந்தரராஜன் மனைவி பார்வதி, அளித்த புகார் மனு: இந்துஅறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் 1993 இல் இருந்து ஆசிரியராக பணி செய்து வருகிறேன். மூத்த ஆசிரியையான எனக்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவி வழங்காமல், என்னை விட பணியில் இளைய ஆசிரியை ஒருவருக்கு பதவி உயர்வை விட்டுக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் தரப்பில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    கல்வித்துறை மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் பள்ளியில் பணி செய்து வரும் பிற ஆசிரியர்களும் நிர்வாகத்துடன் சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்ற 26 நாட்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் கடந்த 7 மாதமாக இழுத்தடித்து வருகிறது. பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பினை அனுமதிக்காமல் என்னை விருப்ப ஓய்வில் செல்லுமாறு நெருக்கடி அளித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: